மீலாதும் மவ்லிதும்

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Feb 28, 2015 Viewers: 2129


மீலாதும் மவ்லிதும்

 மீலாதும் மவ்லிதும்

ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்மீலாதுன் நபிஎன்கிற பெயரில் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்மாதத்தின் முதல் பன்னிரண்டு நாட்களும் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடல்கள் என்கிற பெயரில்: "சுப்ஹான மவ்லிதுஎன்ற பாடல் தொகுப்பு பாடப்படுகிறது.

முதலில் மீலாதுன்நபி குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை பார்ப்போம்.

நபி பிறந்த நாள் விழா கொண்டாடுபவர்கள்: "இது நபியின் பிறந்த நாள். அல்லாஹ்வின் தூதர் பிறந்ததற்கு அந்த நாளில் நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்என்று கூறுகிறார்கள். இதை நன்மையாகவும் கருதுகிறார்கள்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பிறந்தது எந்த மாதம் என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது. நபி பிறந்தது ஸஃபர் மாதத்தில் ரஜபில், ரபீஉல் அவ்வலில், ரமளானில் என்று அறிஞர்களுக்குள் பலவிதமான கூற்றுகள் உள்ளன.

அது போல் ரபீஉல் அவ்வல் மாதம் தான் என்று சொல்வோர்களுக்குள்ளும் அது எந்த நாள் என்பதில் பல கூற்றுகள் உள்ளன. ரபீஉல் அவ்வல் இரண்டு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு என்று வெவ்வேறு நாட்கள் அறிஞர்களால் கூறப்பட்டுள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி). ஜுபைர் பின் முத்இம் (ரலி) ஆகிய நபிதோளர்களின் கூற்றுப்படி ரபீஉல் அவ்வல் எட்டாம் நாளாகும்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அவர்களுக்குப்பின் தாபியீன்களும், தபஉத்தாபியீன்களும் மீலாது கொண்டாடியதில்லை என்பதால் தான் நபி பிறந்த நாள் எது என்பதில் கருத்து வேறுபாடு வந்துள்ளது.

மீலாது கொண்டாட்டத்தை ஆதரிப்பவர்களும் கூட ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இர்பல் எனும் பகுதி அரசராயிருந்தஅல்முலஃப்பர்என்பவர் தான் இந்த விழாவை துவக்கமாக செய்தார் என்கின்றனர். மோசமான ஷியா கொள்கை கொண்ட ஃபாத்திமிய்யா கலீபாக்கள் (ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டு வாக்கில்) நடைமுறைபடுத்தியதாகவும் செய்திகள் உண்டு.

எப்படியிருந்தாலும் நபி (ஸல்) அவர்களோடும் நபித்தோழர்களோடும் தொடர்பில்லாத விழா இது என்பது நன்றாகத் தெரிகிறது.

அப்படியிருந்தும் இது நல்ல காரியம்தான் என்கின்றனர். பரவலாக இந்த விழாவைக் கொண்டாடுகிறீர்கள் உங்கள் கொண்டாட்டங்களைப் பார்த்து விட்டு மாற்று மத ஆட்சியாளர்கள் கூட இந்த விழாவுக்கு விடுமுறை கொடுத்து விட்டார்கள்? இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நல்ல காரியத்தை எப்படி நபித்தோழர்கள் செய்யாமல் விட்டார்கள். இது நன்மை என்றால் இதை அவர்கள் செய்வதற்கான சூழ்நிலை இருந்தது. அப்படி இருந்தும் அவர்கள் செய்யவில்லை என்றால் இது போன்ற செயல்களை பித்அத்தாக பார்த்திருக்கிறார்கள் என்பது தான் அர்த்தம். புதிதாகத் தோன்றகூடிய சிறிய செயலைக் கூட நபித்தோழர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிரார்கள்..

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத கூட்டு  திக்ரு செய்தவர்களை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள். அவ்வாறு செய்தவர்களை நோக்கிநீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் மார்கத்தை விட மிக நேர்வழியான ஒரு மார்கத்தில் இருக்கின்றீர்கள். அல்லது வழிகேட்டின் வாசலை திறக்கின்றீர்கள்என்று கோபத்துடன் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நீண்ட இந்த செய்தியில் தொடர்ந்தும் அந்த மக்களை கண்டித்ததாக உள்ளது. பார்க்க : ஸீனனுத்தாரிமீ (204)

இது போன்ற செய்தி முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் (5409, 5410) இப்னு வழ்ழாஹ் அவர்களின்அல்பிதஉ” (9) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

மார்க்க அறிஞர்களின் தடை:

இந்த மீலாது பித்அத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கூடாது என்று கூறுபவர்களை பழிசொற்களை கூறி இப்படி தடை செய்யும் கருத்து புதிதாக தோன்றியது போல் சித்தரிக்கிறார்கள் பித்அத்துக்காரர்கள். ஆனால் இவர்களே மதிக்கும் மத்ஹபு அறிஞர்கள் முற்காலத்தில் இந்த பித்அத்தை கண்டித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

இதோ மாலிக் மத்ஹபைச் சேர்ந்த இமாம் அபூ ஹஃப்ஸ் தாஜூதீன் அல்ஃபாகிஹானி (இறப்பு 734 ஹி) அவர்கள் நபி பிறந்த நாள் விசேஷம் தொடர்பாக வழங்கியுள்ள ஃபத்வாவை பாருங்கள்!

இந்த மவ்லிதுக்கு (நபி பிறந்த தின விசேசத்துக்கு) (அல்லாஹ்வின்) வேதத்திலும் சுன்னாவிலும் ஒரு அடிப்படை ஆதாரத்தையும் நான் அறியவில்லை. எவர்கள் மார்கத்தில் வழிகாட்டிகளாக இருக்கின்றார்களோ அத்தகைய உம்மத்தின் உலமாக்கள் எவர் ஒருவரும் இதை செய்ததாக அறிவிக்கப்படவுமில்லை. அந்த உலமாக்கள் தங்களுக்கு முன்பிருந்தவர்களின் அடிச்சுவடுகளை பற்றிப்பிடிதவர்களாக இருந்தார்கள். மாறாக இது ஒரு பித்அத் (புதிதாக உண்டாக்கப்பட்டது) ஆகும். இதை வீணர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது மனோ இச்சையாகும் இதன் மூலம் சாப்பாட்டு பிரியர்கள் தங்களின் தேவையை நிறைவு செய்து கொள்கிறார்கள்”.

இவ்வாறு கூறும் இமாம் அல்ஃபாகிஹானி அவர்கள், இது ஏன் கூடாது என்பதற்கான விளக்கத்தையும் தொடர்ந்து கூறுகிறார்கள். அவர்களின் அந்த ஃபத்வா முழுமையாகஅல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித்என்ற பெயரில் சிற்றேடாக உள்ளது.

இந்த ஃபத்வாவை எழுதுவதற்கு முன் இமாம் அவர்கள், “மவ்லித் தொடர்பாக நல்லோர் பலர் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்என்று கூறித்தான் ஆரம்பிக்கிறார்கள். அக்காலத்தில் இந்த காரியத்தை சிலர் செய்து கொண்டிருந்தாலும் நல்லவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு இது கூடாத செயலாக தோன்றியுள்ளது என்பது தெரியவருகிறது.

இமாம் அல்ஃபாகிஹானி மட்டுமின்றி அல்லாமா இப்னுல் ஹாஜ், இப்னு தைமிய்யா, ஷவ்கானி உள்ளிட்ட பல முற்கால அறிஞர்களும் மீலாது வைபவம் நடத்துவதை தடுத்துள்ளார்கள். வேறு பல அறிஞர்கள் இதை சரி கண்டுள்ளார்கள் என்று பித்அத் பிரியர்கள் வாதிக்கலாம்.

ஒரு காரியத்தை சில அறிஞர்கள் ஆகுமென்றும் வேறு சில அறிஞர்கள் ஆகாதென்றும் கூறும் போது எந்தக் கருத்து குர்ஆனுக்கும் நபிவழிக்கும் ஒத்ததாக இருகின்றதோ அதை எடுத்துக் கொள்வதுதான் உண்மை இறை நம்பிக்கையாளர்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் பார்த்தால் இந்த மீலாது கொண்டாட்டம் கூடாது என்ற கருத்தே குர்ஆன், நபி வழிக்கு உடன்பட்டதாக உள்ளது.

மவ்லிது பாடல்களின் தவறுகள்:

மீலாதுவை சரி கண்ட சில முற்கால அறிஞர்களுக்கு இப்போது தமிழகத்தில் பாடப்பட்டு கொண்டிருக்கும் சுப்ஹான மவ்லிது பாடல்கள் கிடைத்திருந்தால் அவற்றை கடுமையாக எதிர்த்திருப்பார்கள். ஏனென்றால் மார்கத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கைக்கே விரோதமான பாடல் அடிகள் பல அதில் உள்ளன. உதாரணத்திற்கு சிலவற்றை காண்போம்:

சுப்ஹான மவ்லிதின் ஐந்தாவது பைத்தில் ஓர் அடி “பஸத்து கஃப்ப ஃபாக்கத்தீ வன்னதமிஅர்ஜுஜசீல பழ்லிகும் வல்கரமி”,

பொருள்: “என் வறுமை, என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்து விட்டேன். ஆகவே யான், தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத் தன்மையை எதிர்பார்கிறேன்”.

இந்த அடியில் வறுமையை நீக்க நபியின் அருட்கொடையை வேண்டி நபியிடம் கைவிரிப்பதைப் பார்க்கிறோம். இது அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதை நபியிடம் கேட்கும் இணைவைப்பு வாசகங்களாகும்.

இது குர்ஆனுடன் எப்படி மோதுகிறது? அல்லாஹ் கூறுகிறான்"நிச்சயமாக உம்முடைய இறைவன், தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்." - அல்குர்ஆன் 17:30, 31

இது போன்ற பல இறைவசனங்களுக்கு இந்த மவ்லிது பாடல் அடி முரண்படுவதை பார்க்கலாம்.

அதற்கடுத்த அடி :

முஸ்தஷ்ஃபிஅன் நஸீல ஹாதல் ஹரமி- ஃபலாஹிளூணீ பிதவாமில் மததி

பொருள்: "மதீனவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையை தேடியவனாக தங்கள் முன் நிற்கின்றேன். எனவே நிரந்தரமான நல்லுதவி செய்வதன் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக!”

இந்த அடிஉன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்என்ற (அல்குர்ஆன் : 1:4) வசனத்துக்கும் இந்த கருத்தை கொண்ட பல்வேறு வசனங்களுக்கும் முரணாக உள்ளது. (உதாரணத்திற்கு பார்க்க : அல்குர்ஆன் 35:2, 3).

அதற்கடுத்த அடி :

கத் ஃபுக்துமுல் கலக பிஹுஸ்னில் குலுகி ஃபஅன்ஜிதுல்மிஸ்கீன கப்லல் கரகி

பொருள்: அழகிய நற்குணங்களின் மூலமாக தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட்டு மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான், கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையை காப்பாற்றுங்கள்!”.

அல்லாஹ் கூறுவதை கவனியுங்கள் : (நபியே) நீர் கூறுவீராக ! அல்லாஹ் நாடியதை தவிர எனக்கு எவ்வித தீமையோ, நன்மையோ எனக்கே செய்து கொள்ள நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. (அல்குர்ஆன் 10:49).

மற்றொரு வசனம் : “(நபியே) நீர் கூறுவீராக ! நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற மாட்டேன்”. - அல்குர்ஆன் 72:21.

இந்த வசனங்களுக்கும் இந்த கருத்திலமைந்த பல வசனங்களுக்கும் மேற்கண்ட மவ்லிது அடி முரண்படுகிறது.

இவை போன்று மவ்லிதில் உள்ள வேறு பல அடிகளும் இஸ்லாத்திற்கு முரணாக அமைந்துள்ளன. அவற்றின் பொருளை அறியும் பொது இஸ்லாத்தைப் பற்றி குறைந்த அளவு தெரிந்த ஒருவரும் கூட அவற்றில் தவறு உள்ளதை புரிந்து தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்விடமே பிரார்த்திக்கவேண்டும் அல்லாஹ் அல்லாதவர்களிடம்அது நபியாகவே இருந்தாலும்பிரார்த்திப்பது இணைவைத்தலாகும். இதன்படி மவ்லிதின் இந்த அடிகளையும் அங்கீகரித்து படிப்பதும் பாடுவதும் இணைவைத்தலாகும்.

அல்லாஹ் கூறுகிறான் : "எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிகின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை தடுத்து விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமகாரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை." - அல்குர்ஆன் 5:72.

ஆகவே பித்அத்தான மீலாதையும், இணை வைப்பதாகவும் பித்அத்தாகவும் உள்ள மவ்லிது பாடல்களையும் விட்டொழிக்க வேண்டும் ! அல்லாஹ் நல்லுதவி செய்வானாக !

(இங்கு இடம் பெற்றுள்ள மவ்லிது அடிகளின் பொருள், மவ்லிது ஆதரவலர்களால் வெளியிடப்பட்டுள்ளசுந்தர தமிழில் ஸுப்ஹான மவ்லிதுஎன்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.)

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE